தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட்குமார் தற்போது தயாரித்து வரும் படம் வீரா. கோ 2 படத்திற்கு பிறகு இந்தப் படத்தை தயாரிக்கிறார், கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன், கருணா, ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, உள்பட பலர் நடிக்கிறார்கள். புதுமுக இயக்குனர் ராஜாராம் இயக்குகிறார். படம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறியதாவது: நல்ல தரம் வாய்ந்த கதை களம் தான் ஒரு திரைப்படத்தின் முழுமையான வெற்றியை நிர்ணயிக்கும். அப்படி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய ஒரு கதை களத்தை தேடி கண்டுபிடித்திருக்கிறார் இயக்குனர் ராஜாராம். நாங்கள் தயாரித்த யாமிருக்க பயமே படத்தின் மூலம் கமர்ஷியல் ஹீரோவாக உருவெடுத்த நடிகர் கிருஷ்ணாவோடு மீண்டும் இந்த வீரா படத்திற்காக கைகோர்த்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எங்களின் கூட்டணி ஒரு அதிர்ஷ்ட கூட்டணி என்று கூட சொல்லலாம். விளம்பர பட உலகில் சிறந்த மாடலாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா மேனன் இந்த வீரா படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளி குவிக்கும் கருணா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
ரஜினி சாரின் பட தலைப்பை எங்கள் படத்திற்கு வைத்திருப்பது எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் பெருமை. தலைப்பை வழங்கியவர் மறைந்த பஞ்சு அருணாச்சலம் சார் தான். அவருக்கு இந்த தருணத்தில் எங்களின் மரியாதையை செலுத்த கடமை பட்டிருக்கிறோம். என்கிறார் எல்ரெட் குமார்.