பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காவிரி நீர் பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படவும், முதல்வர் ஜெயலலிதா நலம் பெறவும் வேண்டி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், நடிகர் ரஜினியின் சகோதரர், 1,008 கலச பூஜை செய்து வழிபட்டார்.
நடிகர் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணன் இவர் நேற்று, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு தன் உறவினர்களுடன், வந்தார். சுவாமி சன்னிதி முன், 1,008 சங்காபிஷேக பூஜை செய்து வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சத்திய நாராயணன் கூறுகையில், முதல்வர் ஜெ., உடல் நலம் பெற்று நீடூழி வாழவும், காவிரி பிரச்னையில் சுமுக தீர்வு ஏற்பட்டு, மக்கள் அமைதியுடன் வாழவும் வேண்டி, கோவிலில், 1,008 கலச பூஜை செய்து வழிபட்டோம், என்றவர், ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டார். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் அதில் உடன்பாடு கிடையாது. தற்போது எந்திரன்-2 படம் வேகமாக உருவாகி வருகிறது என்றார்.