தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வில்லன், குணச்சித்திர நடிகர் என தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது, ஹிந்தியிலும் பெயர் வாங்கியவர் பிரகாஷ்ராஜ். இயக்குனராக நான்கைந்து படங்களை இயக்கியவர். அந்தப் படங்கள் கமர்ஷியலாகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அவருடைய இயக்கத்தை யாரும் பெரிதாகக் குறை சொன்னதில்லை.
தமிழில் வெளிவந்த 'அபியும் நானும்' படத்தை கன்னடத்தில் 'நானு நன்ன கனசு' என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்குனராகவும் அறிமுகமானார். அந்தப் படம் கன்னடத்தில் அந்த ஆண்டின் சிறந்த வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. அதன் பிறகு தமிழ் தெலுங்கில் உருவான 'தோனி' படத்தை இயக்கினார். இந்தப் படம் மராத்தியில் வெளிவந்த 'ஷிக்ஷனாச்சிய ஆய்ச்சா கோ' என்ற படத்தின் ரீமேக். ஆனால், இந்தப் படம் இரண்டு மொழிகளிலும் வெற்றி பெறவில்லை.
அடுத்து மலையாள ஹிட் படமான 'சால்ட் அன்ட் பெப்பர்' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் இயக்கினார். தமிழில் 'உன் சமையலறையில்' என்ற பெயரில் வெளிவந்த இந்தப் படம் தெலுங்கில், 'உலவுசாரு பிரியாணி' என்ற பெயரில் வெளியானது. இந்த இரண்டு மொழிகளிலும் இப்படம் தோல்வியடைந்தது. ஆனால், கன்னடத்தில் 'ஒக்கரனி' என்ற பெயரில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.
தற்போது கன்னடத்தில் 'இடோலி ராமாயணம்', தெலுங்கில் 'மன ஊரி ராமாயணம்' என இரு மொழிகளில் மட்டும் படத்தை இயக்கியுள்ளார் பிரகாஷ்ராஜ். தமிழில் இப்படம் உருவாக்கப்படவில்லை. ஏனென்றால் சத்யராஜ், அனுமோள் நடிக்க கடந்த வருடமே 'ஒரு நாள் இரவில்' என்ற பெயரில் இப்படம் தமிழில் ரீமேக் ஆகி வெளியாகிவிட்டது. பிரபல எடிட்டிர் ஆன்டணி இப்படத்தைத் தமிழில் இயக்கியிருந்தார்.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் தமிழில் தோல்வியடைந்தது. அடுத்து தெலுங்கு, கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது. பிரியாமணி இரு மொழிகளிலும் நாயகியாக நடித்துள்ளார். வழக்கம் போல் கன்னடத்தில் மட்டும் வெற்றி பெறுமா ?, தெலுங்கிலும் சேர்த்து வெற்றி பெறுமா என்பது இரண்டு வாரங்களில் தெரிந்துவிடும்.