தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூப்பர் ஸ்டார் ரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கிஷோர், தன்ஷிகா நடித்துள்ள படம் கபாலி. பா.ரஞ்சித் இயக்கினார், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்தார். இந்தப் படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்தது. தற்போதும் படம் 50 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிக்கிறது.
இந்த நிலையில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் கபாலிக்கு கேளிக்கை வரி விலக்கு கொடுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள கபாலி படத்திற்கு வரிவிலக்கு கொடுத்திருப்பது சட்டத்துக்கு முரணானது. ஒரு படம் கேளிக்கை வரிவிலக்கு பெற அந்தப் படத்தின் தலைப்பு தூய தமிழில் இருக்க வேண்டும். தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலும் கதையிலும், காட்சிகளும் இருக்க வேண்டும். படத்தின் அதிகபடியான உரையாடல்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். ஆபாச காட்சிகளும், வன்முறை காட்சிகளும் இருக்க கூடாது.
மேற்சொன்ன எந்த தகுதியின் அடிப்படையிலும் கபாலி படம் எடுக்கப்படவில்லை. ஆனால் தமிழக அரசின் வணிகவரித்துறை செயலாளர் தன் மனம்போன போக்கில் வரிச்சலுகை அளித்திருப்பது சட்ட விரோதமானது. கேளிக்கை வரிவிலக்கு குழுவில் உள்ளவர்கள் அரசியல் அழுத்தங்களுக்கு ஏற்ப செயல்படுகிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் 70 கோடி முதல் 100 கோடி வரை லாபம் சம்பாதித்து விட்டார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே கபாலிக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகையை ரத்து செய்ய வணிகவரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.