ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குக்கூ ராஜூமுருகன் இயக்கிய படம் ஜோக்கர். அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்ற இந்த படத்தில் நாயகனாக நடித்த குரு சோமசுந்தரத்திற்கு மனைவியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அலட்டல் இல்லாத, துளியும் ஆடம்பரமில்லாத ஒரு ஏழை பெண்ணாக இந்த படத்தில் நடித்திருந்தார் அவர். முக்கியமாக அதிகமாக பேசாமல் முகபாவணைகளால் பர்பாமென்ஸ் செய்திருந்தார். அதனால் அவரது நடிப்புக்கு அந்த படம் வெளியான நேரத்தில் ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்தது. அதோடு, இந்த மாதிரி அழுத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்குமாறும் அவரை பலரும் கேட்டுக்கொண்டார் களாம்.
அதனால்தான், ஜோக்கர் படத்தில் கிடைத்த நல்ல பெயரினை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான கதைகளில்தான் நடிப்பது என்று பல கதைகளை கேட்டு வந்த ரம்யா பாண்டியன், தற்போது ரெட்டைச்சுழி படத்தை இயக்கிய தாமிரா இயக்கும் ஆண்தேவதை படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சமுத்திர கனிக்கு ஜோடியாக நடிக்கும் அவருக்கு ஒரு வித்தியாசமான நாயகி வேடமாம். அதோடு ஜோக்கரில் கிராமத்து பெண்ணாக நடித்த அவர், ஆண்தேவதை படத்தில் நகரத்து பெண்ணாக நடிக்கிறார். இந்த செய்தி வெளியானதில் இருந்து ரம்யா பாண்டியனுக்கு இணையதளம் மூலம் இன்னும் ஏராளமான பாராட்டுக் கள் குவிந்தவண்ணம் உள்ளதாம். அதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போயிருக்கிறார் அவர்.