'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்து பின்னர் ரெட்டைச்சுழி படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் எழுத்தாளர் தாமிரா. முதல் படத்திலேயே பாரதிராஜாவையும், கே.பாலச்சந்தரையும் இணைந்து நடிக்க வைத்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கும் படம் ஆண்தேவதை. இதில் சமுத்திரகனி கதையின் நாயகனாக நடிக்கிறார். நாகியாக ஜோக்கர் படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியன் நடிக்கிறார். இவர்கள் தவிர கவின், கஸ்தூரி, பூ ராமு, இளவரசு, ஸ்ரீநிகா, பிரகதீஷ், யாழ்நிலா, மயில்சாமி, அருண்மொழி, திலீபன் நடிக்கிறார்கள். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறர். ஜிப்ரான் இசை அமைக்கிறார். தனது நண்பர் பக்ருதீனுடன் இணைந்து தாமிராவே தயாரிக்கிறார்.
படம்குறித்து தயாரிப்பு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை. இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட்ஒர்க் வரை எதையும் அதுவே முடிவு செய்கிறது. இப்படிப்பட்ட இன்றைய பரபர சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்.
‛‛ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு? இன்று நிலவும் பொருளாதார சூழலும், கடன் வாங்கும் மனப்பான்மையும் மனிதர்களை எந்த எல்லைக்கு அழைத்துச் செல்கிறது என்பதையும் படம் உணரவைக்கும்'' என்று கூறியுள்ளனர்.