பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
எதிர்நீச்சல், அரிமா நம்பி படங்களில் நடித்தபோது பேசப்பட்ட பிரியா ஆனந்த் அதன்பிறகு சரியான படங்கள் கிடைக்காமல் மார்க்கெட்டில் பின்தங்கிவிட்டார். அதனால், தமிழில் ஏற்பட்ட தேக்க நிலை காரணமாக தெலுங்கு, மலையாள படங்களில் கமிட்டாகி வந்தவர் தற்போது கெளதம் கார்த்தியுடன் வை ராஜா வை படத்தில் நடித்ததைத் தொடர்ந்து தற்போது முத்துராமலிங்கம் என்ற படத்திலும் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
கதைப்படி இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ள பிரியாஆனந்த், ரொம்ப துணிச்சல்கார பெண்ணாக நடித்திருக்கிறாராம். அதேசமயம், கெளதம்கார்த்தியை காதலிக்கிற காட்சிகளில் அதிக நெருக்கம் காட்டி கிராமத்து பெண்களைப்போன்று வெட்கம், கூச்சம் எல்லாவற்றையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தி புதுமையான ரொமான்ஸ் கொடுத்திருக்கிறாராம் பிரியாஆனந்த். இதற்காக அவருக்கு பிரத்யேக பயிற்சி கொடுக்கப்பட்டதாம். ஆனால், பிரியாஆனந்த் வெட்கப்பட்டதைப் பார்த்து அசந்து போன கெளதம் கார்த்திக், பின்னர் படப்பிடிப்பு இல்லாத நேரங்களிலும், அவரை வெட்கப்படச்சொல்லி கலாய்த்துக் கொண்டேயிருந்தாராம்.