டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
குருசுக்ரன் என்ற படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை சாத்னா டைட்டஸ். அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்காதபோதும் அதன்பிறகு விஜய் ஆண்டனியுடன் நடித்த பிச்சைக்காரன் வெற்றிப்படமானது. அதையடுத்து கலையரசனுடன் எய்தவன் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் சாத்னா டைட்டஸ். மேலும் பிச்சைக்காரன் தெலுங்கிலும் ஹிட்டடித்த பிறகு சில டைரக்டர்கள் அவரிடம் கதை சொல்லி வருகிறார்களாம். அதனால் தமிழை விட அவரது தெலுங்கு மார்க்கெட் சூடுபிடித்து விடும் என்கிறார்கள்.
இந்தநிலையில், தற்போது அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தில் நடிக்க சாத்னா டைட்டஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், தற்போது கடம்பன் படத்தில் கேத்ரின் தெரசாவுடன் நடித்து வரும் ஆர்யா, அப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக கேரளாவில் முகாமிட்டுள்ளார். விரைவில் அந்த படம் முடியும் தருவாயில் இருப்பதால் அதை யடுத்து அமீர் இயக்கும் சந்தனதேவன் படத்தில்தான் நடிக்கிறாராம்.
அதோடு, ஆர்யாவின் மார்க்கெட் மந்தமாக இருப்பதால் மார்க்கெட்டில் பிசியாக இருக்கும் சில நடிகைகளை நடிக்க வைத்தால் வியாபாரரீதியாக உதவிகரமாக இருக்கம் என்று சிலமேல்தட்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர்கள் கேட்ட சம்பளம் பட்ஜெட்ரீதியாக சிக்கலை ஏற்படுத்தியதாம். அதனால் விரலுக்கேற்ற வீக்கமாக இப்போது சாத்னாவை நாடியிருக்கிறார்களாம்.