ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'தர்மதுரை' படம் மருத்துவம் மற்றும் மருத்துவர்களை மையமாக வைத்து சமூகத்துக்கு நல்ல கருத்தையும் சொல்லும் படமாக உள்ளது.எனவே இப்படத்தை நிறைய பேர் பாராட்டி வருகிறார்கள்.இயக்குநர் பாலா, இயக்குநர் அமீர், பா.ம.க. நிறுவனம் டாக்டர் ராமதாஸ் உட்பட பலரும் சீனுராமசாமியை பாராட்டியுள்ளனர்.
தர்மதுரை படத்தை பார்த்த நடிகர் சிவகுமார் இயக்குனர் சீனுராமசாமிக்கு 'கிராமத்து பின்னணியில் ஒரு நவீன கதை' என்ற தலைப்பில் ஒரு வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்.''சீனுராமசாமி முழுமையான படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்திய படம 'தர்மதுரை'.
விஜய்சேதுபதி எல்லா தரப்பு மக்களின் இதயங்களிலும் இடம் பிடிக்கும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படிப்பில் ஜெயித்து வாழ்க்கையில் தோற்ற ஒரு டாக்டரின் திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை திரையில் விரிகிறது.காமராஜரின் மதிய உணவு திட்டத்தில் பசி போக்கிய ஏழைச் சிறுவன் மருத்துவ கல்லூரி பேராசிரியராகி காமராஜர் பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டது நெஞ்சில் நிலைக்கும் காட்சி!
ஏழை மக்களின் வரிப் பணத்தில் படித்து டாக்டரானவர்கள், கிராமத்து ஏழைகளுக்கு வைத்தியம செய்து நன்றி கடன் அடைக்க வேண்டும் என்ற தத்துவம் மருத்துவர்களுக்கு பாடம்!தனக்கு தெரியாமல் தன் கருவை கலைத்த டாக்டர் கணவனை தமன்னா விவாகரத்து செய்வதில் உள்ள நியாயம்.'ஆஸ்பத்திரியில் உங்களை அண்ணான்னு கூப்பிட்டுட்டேன்' வெள்ளந்தியாய் சொன்ன அன்பு செல்வி பூச்சி மருந்து சாப்பிட்டு இறக்கும் சோகம்...
கல்லூரியில் கதை ஆரமபித்த பின் படம் முடியும் வரை அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாத திருப்பங்கள்..சீனுராமசாமி வெல்க ராமசாமி...இதுக்கும் மேலே மேலே உங்களிடம் எதிர்பார்க்கிறோம்...”என்று அதில் குறிப்பிட்டுள்ளார் சிவகுமார்.தர்மதுரை படத்துக்கு பல தரப்பினரிடமிருந்து கிடைத்துக் கொண்டிருக்கும் பாராட்டில் மகிழ்ந்துபோயிருக்கிறார் சீனுராமசாமி.