பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் தற்போது நடித்துவரும் ‛விஜய்-60' படத்தின் கதாநாயகிகளாக ஒரே நேரத்தில் மலையாள திரையுலகை சேர்ந்த இருவர் நடிக்கிறார்கள் என்பது புதுமையான விஷயம் தான். இதில் ஒரு ஹீரோயினான கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினி முருகன்' மூலமாக அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டார்.. இன்னொருவரான அபர்ணா வினோத் விஜய் படம் மூலமாகத்தான் தமிழுக்கு அறிமுகமே ஆகிறார். இந்தப்படத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பு தளத்திலேயே தமிழ் டியூசன் கற்றுக்கொள்கிறாராம் அபர்ணா வினோத்.
தமிழ்ப்படத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி என அவரிடம் கேட்டதற்கு, விஜய் படத்தில் நான் நடிக்கிறேன் என்கிற பிரமிப்பு இருக்கிறதே தவிர, மற்றபடி தமிழ்ப்படத்தில் நடிக்கிறோம் என்கிற உணர்வே இல்லை என்கிறார் அபர்ணா. பின்னே இந்தப்படத்தில் அவருக்கு தோழியாக நடிப்பது மலையாளத்தை சேர்ந்த கீர்த்தி சுரேஷ்.. அப்பாவாக நடிப்பது மலையாள நடிகரான விஜயராகவன்.. கீர்த்தியின் அம்மாவாக நடிப்பது மலையாள நடிகையான சீமா. இதுநாள் வரை படமாக்கப்பட காட்சிகள் அனைத்திலும் இவர்களுடனேயே நடித்ததால் மலையாள திரையுலகில் இருக்கும் உணர்வுதான் அபர்ணாவுக்கு இருந்ததாம்.
ஆனால் ஒரே ஒரு மனக்குறை. இதுவரை நடித்த காட்சிகளில் விஜய்யுடன் இணைந்து நடிக்கவில்லையாம். இனிமேல் தான் விஜய்க்கும் இவருக்குமான காட்சிகளை எடுக்க இருக்கிறார்களாம். அதனால் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் அபர்ணா வினோத்.