ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு சைத்தான் படத்தை வெளியிட்ட பிறகுதான் அடுத்த படத்தை தொடங்க வேண்டும் என்ற முடிவில் இருந்தார் விஜய் ஆண்டனி. ஆனால், பிச்சைக்காரன் ஹிட் காரணமாக அவரை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்தது லைகா நிறுவனம். அதனால் ஏற்கனவே தன்னை வைத்து நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கரிடம் கதை கேட்டு ஓகே பண்ணி வைத்திருந்த எமன் படத்தின் படப்பிடிப்பையும் உடனடியாக தொடங்கினார் விஜய் ஆண்டனி. இந்த படத்தை அவர் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துக்கொடுக்கிறார்.
மேலும், ஏற்கனவே நடித்து வந்த சைத்தான் படப்பிடிப்புக்கு நடுவே அவ்வப்போது எமன் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வந்த விஜய் ஆண்டனி இப்போது இறுதிகட்டத்துக்கு வந்து விட்டார். இன்னும் பத்து நாட்களில் எமன் படப்பிடிப்பு முடிந்து விடுமாம். அதோடு, தற்போது சைத்தான் படத்தின் இறுதிகட்ட வேலைகள் இன்னொருபுறம் நடந்து கொண்டிருக்க, அதற்கடுத்து தான் நடிக்க யிருந்த திருடன், ஹிட்லர் படங்களை தள்ளி வைத்து விட்டு, எமன் படவேலைகள் முடிந்ததும் இந்தி பிச்சைக்காரனில் நடிக்க தயாராகப் போகிறாராம் விஜய் ஆண்டனி. அந்த படம் தமிழில் நடித்த பிச்சைக்காரனை விட பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறதாம்.