தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி இறந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. அவரது மரணம் இயற்கையானது அல்ல என்று போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டும் வந்துவிட்டது.. ஆனால் அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதை இன்னும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கலாபவன் மணியின் மரணத்தை தொடர்ந்து, அவரது தம்பி ராமகிருஷ்ணன், தனது அண்ணன் சாவில் மர்மம் உள்ளதாகவும், கலாபவன் மணியின் நண்பர்கள் சிலருக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்றும் அவ்வப்போது குற்றம் சாட்டி வந்தார்.
அதற்கு பதில் கிடைக்கவிலையே தவிர, இந்த விவகாரத்தால் பிரபலமான கலாபவன் மணியின் தம்பியின் வாழ்க்கையை மாற்றும் விதமாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. ரவி கிருஷ்ணன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ள இந்தப்படத்திற்கு 'பெருமலையன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் கேரளாவில் உள்ள பழனூரில் தொடங்க இருக்கிறது. இதற்கு முன் தனது அண்ணன் நடித்த 'பாம்பு பாய்ஸ்' என்கிற படத்தில் சில நிமிடம் மட்டுமே வந்துபோகும் சிறப்பு தோற்றத்தில் ராமகிருஷ்ணன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.