ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்கும் 'இருமுகன்' படம் செப்டம்பர் 2ம் தேதியன்று வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. தற்போது படத்தை செப்டம்பர் 8ம் தேதியன்று தள்ளி வைத்திருக்கிறார்கள். திடீரென படம் ஒரு வாரம் தள்ளிப் போனதற்கு சென்சார் இன்னும் முடிவடையாதது ஒரு காரணம் என்றும் சொல்கிறார்கள். அது மட்டுமல்லாமல் படத்தை தள்ளி வைத்ததற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
'இருமுகன்' படத்தைத் தயாரித்துள்ளது மலையாளப் படத் தயாரிப்பாளரான ஷிபு தமீன்ஸ். இந்தப் படத்தை ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் பெரிய அளவில் வெளியிட அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், மோகன்லால், ஜுனியர் என்டிஆர், சமந்தா நடித்துள்ள 'ஜனதா காரேஜ்' படம் செப்டம்பர் 2ம் தேதியன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தை கேரளாவில் மிகப் பெரிய அளவில் வெளியிட மோகன்லால் திட்டமிட்டுள்ளார். அதனால், விக்ரம் நடித்த 'இருமுகன்' படமும் அதே தினத்தில் வெளிவந்தால் தனது படத்திற்குப் போட்டியாக இருக்கும் என நினைத்திருக்கிறார். அதனால், 'இருமுகன்' படத் தயாரிப்பாளரிடம் படத்தை ஒரு வாரம் தள்ளி வைக்கக் கேட்டுள்ளார். அவரும், மோகன்லால் பேச்சைத் தட்ட முடியாமல் சரி என்று சம்மதித்திருக்கிறார்.
விக்ரம் படத்திற்கு கேரளாவில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அதனால், படத்தை ஒரு வாரம் தள்ளி வைப்பதில் பெரிய நஷ்டம் இருக்காது என தயாரிப்பாளர் முடிவெடுத்தாராம். அதுதான் 'இருமுகன்' ஒரு வாரம் தள்ளிப் போகக் காரணம் என்கிறார்கள்.