விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
திருமணமாகி இரண்டே வருடங்களில் விவாகரத்தை நாடும் நட்சத்திர தம்பதிகளை விட, 25 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து அதன்பின் விவாகரத்தை தேடிச்செல்லும் நட்சத்திர தம்பதிகள் தான் இன்னும் கூடுதலாக அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றனர். அந்தவகையில் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் பிரபல நடிகையான லிசியும் காதலித்து திருமண செய்துகொண்டவர்கள் தான். ஆனாலும் கருத்து வேறுபாடு ஏற்படவே இப்போது 25 வருடங்களுக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்.. இந்த இடைப்பட்ட காலத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் பெரிதாக தாக்கி பேட்டி எதுவும் கொடுக்காமல் நிதானம் காத்துவந்தது ஆச்சர்யம் தான்.
இப்போது பிரியதர்ஷன், தங்களது பிரிவுக்கு முக்கிய காரணம் 'ஈகோ' தான் என குறிப்பிட்டுள்ளார். “இரண்டு விதமான எண்ணங்களை கொண்டுள்ள ஒரு தம்பதி, ஒரே கட்டிலில் உறங்குவது என்பதைவிட, நாகரிகமாக பிரிந்துவிடுவதே நல்லது என்பதுதான் என் கருத்து” என்கிறார் பிரியதர்ஷன். குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வாழ்க்கையில் பல வருடங்கள் நடிக்க வேண்டி இருந்தது.. கடவுள் எனக்கு எல்லாவித வளங்களையும் கொடுத்ததை நான் எப்படி ஏற்றுக்கொண்டேனோ அதேபோலத்தான் இந்தபிரிவையும் ஏற்றுக்கொண்டேன்” என இந்த விவாகரத்தை பாசிடிவாக எடுத்துக்கொண்டுள்ளாராம் பிரியதர்ஷன்.