ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னை: சென்னையில் ஜோக்கர் திரைப்படத்திற்கான வெற்றி விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் எடிட்டர் மோகன், இயக்குநர் லிங்குசாமி, சிவக்குமார், கம்யூனிஸ்ட் கட்சி நல்லகண்ணு, மற்றும் பட குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நல்லகண்ணு‛‛ நான் முதலில் ஜோக்கர் பட தலைப்பை பார்த்தபோது இது ஏதோ காமெடி படமாக இருக்கும் என நினைத்திருத்தேன். நல்ல கருத்துக்களை கூறும் படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் தவறுவதில்லை, ஜோக்கர் படத்தை பொருத்தவரை அனைத்து ஊடகங்களும் ஒரே மாதிரியான கருத்துகளை வெளியிட்டுள்ளன.
கபாலி படத்திற்கு நேர் எதிராக பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். இப்படத்தை பார்த்தபின்பு தான் ‛ஜோக்கர்'என்ற தலைப்பு இப்படத்திற்கு பொருத்தமான தலைப்பு என்பதை உணர்ந்தேன். இந்த படம் எந்த தடையும் இல்லாமல் வெளியாகியுள்ளது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அரசியலில் நடக்கும் விஷயங்களை பார்த்து பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு கண்ணிரே வாராது. ஆனால் இந்த படத்தை பார்த்துவிட்டு வீரமணி, ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அழுதனர், நானும் அழுதுவிட்டேன், 25 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையில் நான் பார்த்த இந்தி படம் ஒன்றில் அன்றாட பிரச்னைகள் குறித்து பேசப்பட்டது. அதை பார்த்த பலர் இந்த படத்தை காசு கொடுத்து பார்க்க வேண்டுமா என பலர் கேட்டனர்.
ஆனால் அந்த நிலை இன்று இல்லை, கழிவறை இல்லாததால் கல்யாணமாகி வந்த பெண் திரும்பி பிறந்த விட்டிற்கே சென்ற அவலமும் இந்த நாட்டில் தான் நடந்தது. இந்த படத்தில் அந்த பிரச்னை குறித்து ஆழமாக பேசப்பட்டது. இந்த படத்தில் ஒரு காட்சியில் மழை பெய்த போது கழிவறை கட்டடம் இடிந்து உள்ள இருந்த அந்த பெண் மீது விழுந்து விட கூடாது என பதபதைப்புடன் பார்த்து கொண்டிந்தேன், ஆனால் அது தான் நடந்தது. கழிவறை கட்டுவதிலும் ஊழல் செய்யும் நாடு இது. நாங்கள் 20 ஆண்டுகளாக மணற்கொள்ளை, குடிநீர் பிரச்சனை என பல பிரச்னைகளுக்காக பேராடி இருக்கிறோம் அதில் ஒன்று தருமபுரி மாவட்டத்தில் ‛புளோரைடு' கலந்து வரும் தண்ணீர் குறித்த போராட்டம், அந்த பிரச்சனை குறித்தும் இப்படத்தில் பேசப்பட்டுள்ளது.
மக்கள் சகாயம் பண்ண வேண்டும் என சொல்லவில்லை, சகாயம் போல் வாழ வேண்டும் என்றே சொல்கிறோம், எடிட்டர் மோகன் பேசும் போது இந்த படத்தை முதல்வர், பிரதமர்களுக்கு போட்டு காட்ட வேண்டும் என பேசினார். அப்படியெல்லாம் அவ்வளவு எளிதாக செய்து விட முடியாது, அப்படி செய்ய முற்பட்டால் இந்த படத்திற்கு தடை தான் வரும், இது போல் தொடர்ந்து வரும் நல்ல படங்களை ஊடகங்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் '' என பேசினார்.