தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சாமி, சிங்கம், தாமிரபரணி போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் ஹரி. தற்போது இவர் சூர்யாவை கொண்டு சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‛எஸ்3'-யை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், கார்த்தி, கருப்பசாமி என்ற இருவர் ஹரிக்கு போன் செய்து, வீட்டில் வெடிகுண்டு வீசப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். முதலில் நள்ளிரவு 2.30 மணிக்கு பேசிய இந்த இருவர் தொடர்ந்து காலை 7 மணியளவிலும் போன் செய்து மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து ஹரி, அருகில் உள்ள விருகம்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீசாரும் ஹரியின் புகாரை ஏற்று விசாரித்து வருகின்றனர். கார்த்தி, கருப்பசாமி இருவரும் ஹரியின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் ஹரி வீட்டிற்கு அருகிலேயே இருப்பதாகவும், இடப்பிரச்னை காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் அதன் வெளிப்பாடாக ஹரிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.