'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் ரயில் கொள்ளை சம்பவம் நடந் தது. ஆனால் இதேபோன்ற ஒரு சம்பவத்தை பல மாதங்களுக்கு முன்பே ரெடி பண்ணி அதை கண்டெய்னர் லாரி கொள்ளை சம்பவமாக மோர் மிளகா படத்திற்காக படமாக்கியிருக்கிறார் டைரக்டர் ராம் கிருஷ் மிர்னாலி. இந்த படத்தில் புதுமுக நடிகர் சேந்தன் நாயகனாக நடித்துள்ளார். கதைப்படி அவர் சாகா மனிதன் என்ற வேடத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் எடுக்கும் முயற்சிகளை முறியடிக்கும் கதையில் இந்த படம் உருவாகி வருகிறது. அதாவது, கண்டெய்னர் லாரிகளில் ரிசர்வ் வங்கி கொண்டு செல்லும் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் மிஷின்களை கொள்ளையடித்து சென்று பாகிஸ்தானில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அதை இந்தியாவில் புழக்கத்தில் விடுகின்றனர் தீவிரவாதிகள். இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க இந்த முயற்சி நடக்கிறது.
அதனால், அந்த தீவிரவாதிகளை பிடிக்க வேண்டும் என்பதற்காக காந்தி நோட்டுக்குப் பதிலாக அமிதாப்பச்சனின் படம் இடம்பெற்றுள்ள ரூபாய் நோட்டு களை அச்சடித்து அதை ஒரு கண்டெய்னர் லாரியில் அனுப்புகின்றனர் ரகசிய போலீசார். அப்போது அந்த ரூபாய் நோட்டுகளை கொள்ளையடிக்க வரும் சாகா மனிதனை போலீசார் சுற்றி வளைத்து சுடுகின்றனர். ஆனால் துப்பாக்கி சூடு பட்டும் அந்த சாகா மனிதன் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று தப்பித்து விடுகிறான். இந்த காட்சியை சென்னையிலுள்ள எண்ணூர் ஹைவேஸில், கண்டெய்னர் லாரி வைத்து 10 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. அப்போது சாகா மனிதனுக்கும், ரகசிய போலீசாருக்குமிடையே நடக்கும் ஒரு அதிரடி சண்டை காட்சியை பைட் மாஸ்டர் தவசி ராஜ் படமாக்கியுள்ளார். ஹாலிவுட் பாணியில் உருவாகியுள்ள இந்த சண்டை காட்சி தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்