தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அபியும் நானும், மொழி, கவுரவம் படங்களை இயக்கிய ராதாமோகன் கடைசியாக உப்புக்கருவாடு என்ற படத்தை இயக்கினார். அவர் தற்போது இயக்கும் புதிய படம் பிருந்தாவனம். இதில் அருள்நிதி நாயகனாகவும், தான்யா நாயகியாகவும் நடிக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விவேக் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார், விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். விஜய் சேதுபதி நடித்த சேதுபதி, ஜெய் நடிக்கும் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தை தயாரிக்கும் ஷான் சுந்தர் பிருந்தாவனத்தையும் தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூரில் நேற்று முன்தினம் தெடங்கியது. தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த ராதாமோகனுக்கு அடுத்து தொடர் தோல்விகள் தான் கிடைத்தது. இதனால் இந்தப் படத்தில் எப்படியும் வெற்றி பெற்றே தீருவது என்று அதற்காக திரைக்கதை வடிமைப்பில் கவனம் செலுத்தியிருக்கிறார் ராதாமோகன், அவருக்கு துணையாக பொன்.பார்த்திபன் வசனம் எழுதிக் கொடுத்திருக்கிறார். வித்தியாசமான காதல் கதையாக உருவாகிறது பிருந்தாவனம்.