ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் டி.இமான் இசையமைப்பில் சுதீப், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'முடிஞ்சா இவன புடி'. இப்படம் கன்னடத்திலும் தயாரிக்கப்பட்டு அங்கு 'கோட்டிகொப்பா 2' என்ற பெயரில் வெளியானது. கன்னட நடிகரான சுதீப்புக்கு அங்கு மிகப் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. அவர்களை இந்தப் படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதனால் படம் வெளியான நான்கு நாட்களிலேயே கர்நாடகாவில் சுமார் 22 கோடி ரூபாயை இந்தப் படம் வசூலித்தது. பெங்களூருவில் மட்டும் சுமார் 6 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த வசூல் தொகையையும் கர்நாடக வினியோகஸ்தர்கள் அறிவித்துள்ளார்கள்.
நேற்று கர்நாடகாவின் 7 ஏரியாக்களையும் சேர்ந்த 6 வினியோகஸ்தர்கள் மற்றும் சுதீப் உட்பட படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். படம் வெளியான முதல் நான்கு நாட்களிலேயே சுமார் 22 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒரு படத்தின் வினியோகஸ்தர்கள் சேர்ந்து படத்தின் வசூல் பற்றிய விவரங்களைத் தெரிவித்துள்ளது இதுதான் முதல் முறை என சாண்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழிலும் தேவையற்ற தடைகளை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் அங்கும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கம் என சுதீப் வருத்தத்துடன் கூறியுள்ளார். இதனிடையே ரஜினிகாந்த் இந்தப் படத்தை இன்று சென்னையில் பார்க்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.