ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் 'யாருடா மகேஷ்' படத்தில் நடித்தவர் சந்தீப் கிஷன். பக்கா சென்னை பையன். ஆனால் 'யாருடா மகேஷ்' வெற்றி பெறாததால் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் அங்கு முன்னணி நடிகர் ஆகிவிட்டார், 'ஷோர் இன் தி சிட்டி' என்ற பாலிவுட் படத்தில் நடித்து அதுவும் ஹிட்டாகி விட்டது. சொந்த மண்ணில் ஜெயிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. தற்போது 'மாயவன்' படத்தில் நடித்து வருகிறார். அதன் மூலம் தமிழில் நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்.
தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கும் 'மாயவன்' படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதற்காக உடல் எடையை அதிகரித்து முறுக்கு மீசை வளர்த்து நடிக்கிறார். ஹீரோயின் லாவண்யா மனநல மருத்துவராக நடித்துள்ளார். பன்ஞ் டயலாக் பேசி ஒன்ட்றை டன் வெயிட்டில் அடித்து ஹீரோயிசம் பண்ணாமல் யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது தவிர தமிழ், தெலுங்கில் தயாராகும் 'மாநகரம்' படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழில் நடிக்க நல்ல கதைகளை தேடிக் கொண்டிருக்கிறார்.