'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
நான் கடவுள் படத்தில் வில்லனாக அறிமுகமான சண்டை கலைஞரான ராஜேந்திரன்தான் இப்போத ஆதிக படங்களில் நடிக்கும் நடிகர். ஒரே நேரத்தில் 30 படங்களில் நடிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா ஆனால் அதுதான் உண்மை.
நான் கடவுள் ராஜேந்திரன் கதையின் நாயகனாக நடித்து வரும் படம் யானை மேல் குதிரை சவாரி. அவருக்கு ஜோடியாக அர்சனா சிங் நடிக்கிறார். இவர்களுடன் லொள்ளு சபா சுவாமிநாதன், வழக்கு எண் முத்துராமன், தாரிக்கா உள்பட பலர் நடிக்கிறார்கள். கருப்பையா முருகன் இயக்குகிறார் இமாலயன் இசை அமைக்கிறார். மோகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
"உலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை. முடியாது என்று ஒதுங்கி இருப்பதை விட முயற்சித்து பார்த்து தோற்பதே மேல் என்கிற மேசேஜ் சொல்ற படம். யாராலும் முடியாது என்ற ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு வேலையை நான் கடவுள் ராஜேந்திரன் செய்து முடிப்பதுதான் கதை. யானை மீது குதிரை சவாரி செய்ய முடியாது. ஆனால் முயற்சித்தால் அதுவும் முடியும். எப்படி என்பது படத்தில் இருக்கிறது" என்கிறார் இயக்குனர் கருப்பையா முருகன்.
ஹீரோவாக நடிப்பது பற்றி நான் கடவுள் ராஜேந்திரன் கூறியதாவது: "யப்பா ஹீரோவெல்லாம் கிடையாதுப்பா எல்லா படத்துக்கும் பத்து நாள் வேலை செய்வேன். இதுல 30 நாள் வேலை செஞ்சிருக்கேன். நான்பாட்டுக்கு சண்டை போட்டோமோ பேட்டாவ வாங்கினோமான்னு இருந்தேன் இந்த பாலா தம்பி நடிக்க வச்சிருச்சி. இப்ப பாரு 60 வயசுக்கு மேல நிற்க நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கேன். சாதிக்கிறதுக்கு வயசு முக்கியமில்லேன்னு சொல்வாங்கப்பா அதை நான் ஒத்துக்கிறேன்ப்பா. என்கிறார் ராஜேந்திரன்.