இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் மற்றும் கன்னடத்தில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கி உள்ள படம் முடிஞ்சா இவன புடி. கன்னட நடிகர் சுதீப், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், சதீஷ், நாசர் நடித்துள்ளனர். இதனை கன்னட தயாரிப்பாளர் எம்.பி.பாபு மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்கள். இரண்டு மொழிகளிலும் நாளை வெளிவருகிறது. இதனை தமிழ் நாட்டில் ராக்லைன் வெங்கடேஷ் வெளியிடுகிறார்.
ராக்லைன் வெங்கடேஷ் ரஜினி நடித்த லிங்கா படத்தை தயாரித்தவர். லிங்கா படத்திற்கு நஷ்டஈடு கேட்டு விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் போர்க்கொடி உயர்த்தினர். தயாரிப்பாளர் சங்கம் முன்னிலையிம் பணம் பைசல் செய்யப்பட்டது. தற்போது ராக்லைன் வெங்கடேஷ் வெளியிடும் முடிஞ்சா இவன புடி படத்திற்கு சில விநியோகஸ்தர்கள் தடையாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ராக்லைன் வெங்கடேஷ் லிங்கா நஷ்டஈட்டை முழுமையாக தரவில்லை என்று கூறி படத்துக்கு இடையூறு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராக்லைன் வெங்கடேஷ் கூறியதாவது: லிங்கா படத்தின் பிரச்சினைகள் எப்போதோ முடிந்து விட்டது. 95 சதவிகித பணத்தை செட்டில் பண்ணிவிட்டேன். இன்னும் 5 சதவிகிதம் பாக்கி உள்ளது. அது வேந்தர் மூவீஸ் மதனுக்கு கொடுக்க வேண்டியது. அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அதனால் கொடுக்க முடியவில்லை. வேறு யாரிடம் வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு வேந்தர் மூவீசிடமிருந்து செட்டில்மெண்ட் கடிதம் பெற்றுத் தரவேண்டும்.
ஒரு சிலர் அந்தப் பணத்தை எங்களிடம் கொடுங்கள் என்று கேட்டு மிரட்டுகிறார்கள். அதை கொடுக்க மறுத்தால் படத்தை வெளியிட விடமாட்டோம் என்கிறார்கள். முடிஞ்சா இவன புடி படம் வருகிற 12ந் தேதி (நாளை) வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. படத்தை தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் செல்வேன் என்றார் ராக்லைன் வெங்கடேஷ்.