டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தமிழில் படம் இயக்காமல் நேரடியாக கன்னடத்தில் படம் இயக்க சென்றார். அங்கு அவர் நடிகர் சுதீப்பை கொண்டு ‛முடிஞ்சா இவன புடி' என்ற படத்தை இயக்கினார். கன்னடம் மற்றும் தமிழ் என இருமொழிகளில் ஒரேநேரத்தில் இப்படம் தயாராகி உள்ளது. சுதீப் ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஆக்ஷ்ன் கம் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் முடிஞ்சா இவன புடி படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து படம் இந்தவாரம் ஆகஸ்ட் 12ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தான் முடிஞ்சா இவன புடி படத்தின் தயாரிப்பாளர். ஏற்கனவே லிங்கா நஷ்ட பிரச்னை தமிழகத்தில் சில இடங்களில் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இந்தச்சூழலில் லிங்கா படத்தை காரணம் காட்டி விநியோகஸ்தர்கள் சில முடிஞ்சா இவன புடி படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதனால் திட்டமிட்டபடி வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி முடிஞ்சா இவன புடி படம் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.