பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சினிமாவில் அடிக்கடி ஒரு 'டிரென்ட்' வரும் போகும். அந்த டிரென்டில் சிலர் சில காலம் பயணிப்பார்கள். ஆனால், அந்த டிரென்ட் அனைவருக்குமே கை கூடாது. சிலரை மட்டும் மேலே தூக்கி விடும், சிலரை அதல பாதாளத்தில் தள்ளிவிடும். அப்படி ஒரு 'டிரென்ட்' ஆக ஹீரோக்கள் 'திருநங்கை' கதாபாத்திரங்களிலும் அல்லது 'பெண்' கதாபாத்திரத்திலும் நடிப்பது ஆரம்பமாகிறதோ என ஒரு சந்தேகம் வருகிறது.
கமல்ஹாசன் நடித்த 'அவ்வை சண்முகி' படம் மாதிரி ஒரு சில படங்கள் மட்டுமே வர முடியும். அதற்கு அதிகமான மெனக்கெடல் வேண்டும், கதைகள் அமைய வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு அமீர் இயக்கிய 'ஆதி பகவன்' படத்தில் ஜெயம் ரவி இரண்டு கதாபாத்திரங்களில் ஒரு கதாபாத்திரமாக 'திருநங்கை' கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படத்தின் கதை படு சொதப்பலாக அமைந்ததால், அவருடைய நடிப்பும் எடுபடாமல் போனது.
இப்போது 'அவ்வை சண்முகி' மாதிரியான ஒரு பாத்திரத்தில் 'ரெமோ' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். 'ஆதி பகவன்' படத்தில் ஜெயம் ரவி நடித்த திருநங்கை கதாபாத்திரத்தில் 'இருமுகன்' படத்தில் விக்ரம் நடிக்கிறார் என அந்தப் படம் ஆரம்பமான போதே பேசப்பட்டது. ஆனால், அதை படம் சம்பந்தப்பட்டவர்கள் உறுதி செய்யவில்லை. ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாக உள்ள 'இரு முகன்' படத்தின் டிரைலரைப் பற்றிய சிறிய கண்ணோட்டம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்கள். அதில், 'நைல் பாலீஷ் அணிந்த விரல்கள், அதில் மோதிரங்கள், பெண்கள் அணியும் செருப்பு' ஆகியவற்றுடன் முகமூடி அணிந்து விக்ரம் (?) இருக்கும் காட்சிகளைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. அது உண்மைதானா என்பது ஆகஸ்ட் 2ம் தேதி தெரிந்துவிடும்.