தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் சுதீப். நான் ஈ படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து பாகுபலியில் சிறிய ரோலில் நடித்தார். தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள ‛முடிஞ்சா இவன புடி' படத்தில் நித்யா மேனனுடன் நடித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இதுப்பற்றி சுதீப் பேசும்போது... ‛‛நான் ஈ படத்துக்கு பிறகு தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டார்கள், நான் கன்னட நடிகராக இருந்தாலும் தமிழ் மக்கள் எனக்கு கொடுத்த அன்பு ரொம்ப அபரீதமானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்தது புது அனுபவம், ரெண்டு ரோலில் நடித்துள்ளேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவராகவும், வில்லன் ரோலிலும் நடித்துள்ளேன். நிறைய தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். நித்யா மேனன் எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். மிக சிறந்த நடிகை அவர். விரைவில் தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து ரசிகர்கள் எனக்கு சப்போர்ட் பண்ணனும் என்கிறார் சுதீப்.