சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
விஜய் நடிப்பில் விவசாயத்திற்காக போராடும் கதைக்களத்தில் உருவான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் சிரஞ்சீவியின் 150வது படமாக டோலிவுட்டில் தயாராகி வருகின்றது. தமிழில் சர்ச்சைகளுக்கு மத்தியில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் திரைக்கு வந்த கத்தி படத்தை தெலுங்கில் கத்திலான்டோடு என்ற பெயரில் இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளை நிறைவு செய்து படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்புகளில் இறங்கியுள்ளது. இருப்பினும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் வில்லனை தற்போதுதான் இயக்குனர் தேர்வு செய்துள்ளார். கணிதன் படத்தில் வில்லனாக நடித்த தருண் அரோரா இப்படத்தில் சிரஞ்சீவியுடன் மோத உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கத்தி படத்தில் நடித்த நீல் நிதின் முகேஷ், அல்லது பாலிவுட் பிரலம் விவேக் ஓப்ராய் போன்றோர் சிரஞ்சீயின் 150வது படத்தில் வில்லனாக நடிக்கலாம் என கூறப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு தருண் அரோராவிற்கு கிடைத்துள்ளது. சிரஞ்சீவியுடன் சுடலனி உண்டி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த அஞ்சலா ஜவேரியின் கணவர்தான் தருண் அரோரா என்பது குறிப்பிடத்தக்கது.