பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
மலையாளத்தில் தான் நடித்து வரும் 'புலி முருகன்', 'ஒப்பம்' ஆகிய படங்களை விட 'கபாலி' படத்தை கேரளாவில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யவேண்டும் என மோகன்லால் அதிக முனைப்பு காட்டி அதை சாதித்தும் விட்டார். மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் தான் 'கபாலி' படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது. அடுத்ததாக மோகன்லாலின் படங்கள் வரிசையாக வெளியாக இருக்கின்றன. இதை தொடர்ந்து விஜய் தற்போது நடித்து வரும் அவரது 60வது படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையையும் வாங்கும் முயற்சியில் ஆசீர்வாத் சினிமாஸ் இப்போதே இறங்கியுள்ளதாம்..
விஜய்யும் மோகன்லாலும் 'ஜில்லா' பிரண்ட்ஸ் என்பதால் படம் ஈசியாக கிடைத்துவிடும் என்றே வைத்துக்கொள்ளுங்கள்/.. ஆனால் 'கபாலி'யைப்போல விஜய் படத்தை வாங்கி கேரளாவில் ரிலீஸ் செய்து அதில் லாபம் சம்பாதிப்பதல்ல மோகன்லாலின் நோக்கம். சொல்லப்போனால் 'கபாலி'யை கேரளாவில் வெளியிட்டது கூட, தனது மைத்துனர் சுரேஷ் மற்றும் நண்பர் ஆண்டனி பெரும்பாவூர் இறுவருக்காகத்தான். அதேபோல விஜய் படத்தை வெளியிட இருப்பது விஜய்க்காக அல்ல.. அதில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷுக்காகத்தான்..
ஆம். கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷும் மோகன்லாலும் நீண்ட கால நண்பர்கள். கீர்த்தியின் அம்மா மேனகா மோகன்லாலுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர். கீர்த்தி அறிமுகமானதே கூட மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'கீதாஞ்சலி' படத்தில் தான். சமீபகாலமாக மலையாள படங்களை விடுத்து தமிழில் மட்டுமே கவனம் செலுத்திவரும் கீர்த்தி சுரேஷை மலையாள திரையுலகிலும் ஸ்திரமாக காலூன்ற செய்யும் விதமாக, 'விஜய்-60' படத்தை மோகன்லால் பிரமாண்டமாக புரமோட் பண்ண இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை தொடர்ந்து மோகன்லாலின் ஆலோசனைப்படி மலையாள திரையுலகிலும் கவனம் செலுத்த இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.