டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்த் திரையுலகத்தில் இனி எதிலும் ஒளிவு மறைவு இருக்கப் போவதில்லை. முன்பெல்லாம் ஒரு திரைப்பட விஷயத்தைப் பற்றி எவ்வளவோ துருவித் துருவிக் கேட்டாலும் சம்பந்தப்பட்டவர்கள் எதைப் பற்றியும் வாயைத் திறக்க மாட்டார்கள். ஒரு படம் பற்றிய அனைத்து ரகசியங்களும் காக்கப்பட்டு, ஓரளவிற்கு மட்டுமே மீடியாக்களில் அந்தப் படம் பற்றிய செய்தி வரும். அதன் பின் படத்தைப் பார்க்கும் போதுதான் ரசிகர்களுக்கு அந்தப் படம் பற்றிய அனைத்து அனுபவங்களும் முதல் முறையாகப் பார்க்கும் போது புதுமையாகக் கிடைக்கும்.
ஆனால், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் ரகசியமாக எடுக்கப்படும் காட்சிகள், தோற்றங்கள், மேக்கப் விவகாரங்கள் மொபைல் போன் மூலம் திருட்டுத் தனமாகவும் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. எந்த ஒரு விஷயத்தையும் யாராலும் காப்பாற்றவே முடியவில்லை. சில படங்களின் காட்சிகள், பாடல்கள் மட்டும் திருட்டுத்தனமாக 'லீக்' ஆனது போக சில படங்களும் வெளியீட்டிற்கு முன்னதாகவே இணையங்களிலும் வெளியாகி வருகிறது. அதே போலத்தான் ஒரு படம் எவ்வளவு வியாபாரம் செய்யப்பட்டது, எவ்வளவு வசூலானது என்பது குறித்து ரசிகர்கள் அதிகமாகக் கவலைப்பட்டதில்லை. அந்தப் படம் வெற்றியா தோல்வியா என்று மட்டுமே பார்த்தார்கள்.
இன்றோ, டீசரை எத்தனை பேர் பார்த்தார்கள், பாடல்களை எத்தனை பேர் டவுன்லோட் செய்தார்கள், என்ன வியாபாரம் ஆனது, எவ்வளவு ரூபாய்க்கு டிக்கெட் விற்றது, முதல் நாள் எவ்வளவு வசூலானது, ஹீரோ என்ன சம்பளம் வாங்கினார், மற்றவர்களுக்கு என்ன சம்பளம், படம் லாபமா ? நஷ்டமா, என அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'ரெமோ' படத்தைத் தயாரிக்கும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் இப்படத்தின் வியாபாரம் ஆரம்பமாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண், மெயில் முகவரி ஆகியவற்றுடன் படத்தின் வெளியீட்டுத் தேதியான அக்டோபர் 7ம் தேதியையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இப்படி ஒரு அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் கொடுக்கும் என்பது உண்மை.