தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
க்ரவுண்ட் பண்டிங் முறையில், (அதாவது பலர் சிறிய அளவில் முதலீடு செய்வது) கன்னடத்தில் 'லூசியா' என்ற படம் எடுக்கப்பட்டது. இது அங்கு பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதே டீம் மீண்டும் அதே முறையில் தயாரித்த 'யூ டேர்ன்' படமும் பெரிய வெற்றி பெற்று அதுவும் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது. அதே பாணியில் தற்போது பார்த்திபன் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' என்ற படத்தை இயக்குகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
க்ரவுண்ட் பண்டிங் முறையில் தயாரிக்கும் இப்படத்தை நம்பிக்கை என்றே தற்பெருமையாக குறிப்பிடுகிறேன். இன்னும் இரண்டு படங்கள் என் நடிப்பில் துவங்குகிறது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. நண்பர் சுசீந்திரன் இயக்கத்தில் தம்பி விஷ்ணு விஷாலுடன் இணையும் படம் ஒன்றும், புதிய இயக்குனர் சுதர்சன் இயக்க "கயல் சந்திரன் உடன் நடிக்கும் இப்படி மூன்று படங்கள் இன்றைய தளத்தில், நாளைய தரத்தில் தயாராக இருக்கிறது. இன்னும் ஒன்று தேனாண்டாள் படம் அக்டோபரில், இன்னும் சில பேச்சுவார்த்தையில்... இதை விட எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் எனக்காக ஒரு கதை சொல்ல கேட்ட உடன் நானே அவருக்கு முன் தொகை கொடுத்து முன் பதிவு செய்துக்கொண்டுள்ளேன் . அதுவும் விரைவில் துவங்கும். எனவே குறை ஒன்றுமில்லை .
ரீல் எஸ்டேட் கம்பெனி என்ற பெயரில் க்ரவுட, ப்ரவுட் பண்டிங் என்ற கூட்டு தயாரிப்பு நிறுவனம் துவங்க பணத்தேவை முக்கிய காரணமில்லை முகநூல் நண்பர்களுக்கான சந்திப்பில் நண்பர் விஜயகுமார்" 10 லட்சம் தான் என்னால் முதலீடு செய்ய முடியும். என்னை போன்றவர்களை இணைத்து ஒருபடம் நீங்கள் எடுக்க வேண்டும் "என வேண்டியதோடு அதற்குரிய காசோலையை கிழித்துகையில் திணித்து விட்டும் போனார். அதை அறிந்த இன்னும் சிலர் தானாக முன்வந்தார்கள். அப்படி துவங்குகிறது இப்படம் லாபம்.
மிக மிக மிக மிக சிறிய முதலீட்டிற்கு அதீத லாபமும் வரலாம் சொற்ப நஷ்டமும் வரலாம் என்பது கணக்கு. ஆனால் என் கணக்கு நம்பியவர்களுக்கு நயா பைசாவாவது லாபமாக கொடுத்து நம்பிக்கையை காப்பாற்றி இந்த சிறுகுறு முதலீட்டாளர்களை பாதுகாப்பதின் மூலம் பிற்காலத்தில் பெரிய பட்ஜட் படங்கள் செய்யலாம்.
களவு போய்க்கொண்டிருக்கும் திரைத்துறைக்கு புத்துணரச்சி தரும் விதமாக புதிய தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்யலாம். இவ்வகையான தயாரிப்பை என்னைப் போன்ற பணத்திற்கு அப்பார்பட்டவர்கள் மட்டுமே நேர்மையாக செய்ய முடியும். படத்தைத் துவங்கி விட்டு இதை வெளியிடலாம் என்றே இன்று இடுகிறேன் வெளி! இது இராதா கிருஷ்ணன் பார்த்திபன் இடும் கோடிட்ட இடங்களை நிரப்புக. இவ்வாறு பார்ர்த்திபன் தெரிவித்துதுள்ளார்.