திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
அஞ்சான், உத்தமவில்லன் படங்களுக்குப் பிறகு டைரக்டர் லிங்குசாமி தயாரித்து வந்த இடம்பொருள் ஏவல், ரஜினிமுருகன் உள்ளிட்ட சில படங்கள் திரைக்கு வர முடியாமல் கிடப்பில் கிடந்தன. அதில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த ரஜினிமுருகன் படம் மட்டுமே வெளியானது. மேலும் அதையடுத்து, தமிழில் தான் இயக்கிய பையா படத்தை இந்தியில் லிங்குசாமி இயக்குவதாக கூறப்பட்டது. அந்த படத்தில் அஞ்சான் பட வில்லன் நாயகனாக நடிக்கயிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படம் இப்போது நடைபெறவில்லையாம்.
இதற்கிடையே, சண்டக்கோழி-2 படத்தை விஷாலை வைத்து இயக்கும் முயற்சியில் இறங்கினார் லிங்குசாமி. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் அதையடுத்து தெலுங்கில் அல்லுஅர்ஜூனை வைத்து ஏற்கனவே தான் இயக்கிய சண்டக்கோழி படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டார் லிங்குசாமி. ஆனால் என்னகாரணமோ இப்போது அந்த பட நடக்கவில்லையாம். ஆக, தெலுங்கு, இந்தி என எந்த மொழியிலும் தற்போது லிங்குசாமி படம் இயக்கவில்லையாம்.
இந்தநிலையில், மீண்டும் சண்டக்கோழி-2 படம் சமபந்தமாக விஷாலுக்கும், அவருக்குமிடையே பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. ஆனால் அந்த செய்தியில் உண்மையில்லையாம். அந்த படம் சம்பந்தமாக மீண்டும் விஷால்-லிங்குசாமிக்கிடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்கிறார்கள்.