ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு 'காண்' படத்தை இயக்க ஆரம்பித்த செல்வராகவன் அந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். இருந்தாலும் சிறிய இடைவெளிக்குப் பிறகு 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை ஆரம்பித்து விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி தற்போது அதையும் முடித்துவிட்டார். செல்வராகவனின் இந்த வேகமான பணி குறித்து தமிழ்த் திரையுலகமே ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறது. பொதுவாக பட்ஜெட்டை இழுப்பதிலும், ஷுட்டிங் தேதிகளை நீட்டிப்பதிலும் செல்வராகவன் பாணியே தனி என்பார்கள்.
ஆனால், இந்தப் படத்தை இயக்குனர் கௌதம் மேனன் தயாரித்திருப்பதால் படம் ஆரம்பிக்கும் போதே அனைத்தையும் தெளிவாகப் பேசிவிட்டார் என்கிறார்கள். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்க ரெஜினா கதாநாயகியாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது.
படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்ததையடுத்து விரைவில் படத்தின் டீசரும், பாடல்களும் வெளியாக உள்ளது. இந்தப் படம் செல்வராகவனுக்கு நிச்சயம் வேறு ஒரு பெயரைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.