டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குநர் மு.களஞ்சியத்தின் உதவியாளர் ஏ.ஆர்.சங்கரபாண்டி இயக்கியுள்ள படம் ‛பட்டதாரி'. அபி சரவணன், அதிதி, ரசிகா ஆகியோர் லீடு ரோலில் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.குமரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு படத்தின் ஹீரோயின்கள் யாரும் வரவில்லை, பெரிய விளம்பரம் இல்லை, ஆடியோ விழாக்களிலும் சில சர்ச்சைகள் நிகழ்ந்தன, இந்த விழாவில் பங்கேற்ற அம்மா கிரியேசன்ஸ் சிவா கூட ‛என்ன விழா இது, நடிகர்கள் யாரும் வரவில்லை' என்று கூட ஆதங்கப்பட்டார் கேட்டார்.
இதுப்பற்றி நடிகர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது... பட்டதாரி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஹீரோ, ஹீரோயின்கள் வர தயாராக இருந்தார்களாம், ஆனால் கடைசிநேரம் வரை யாரையும் படக்குழு அழைக்கவில்லையாம். மேலும் படப்பிடிப்பின்போது நிறைய பிரச்னைகள் வந்தது என்றும், ஆனால் புதுமுக நடிகர்கள் அவை அத்தனையும் பொறுத்துக்கொண்டு படம் நன்றாக வந்தால் போதும் என்று கேட்ட கால்ஷீட்டை விட அதிகநாட்கள் நடித்து கொடுத்துள்ளார்களாம். மேலும் புதுமுக நடிகருக்கு கூட பேசிய சம்பளம் சரியாக தரவில்லை என்று கூறப்படுகிறது. இப்போது கூட தங்களின் முதல்படத்தில் இவ்வளவு பிரச்னை என்பதை விட தங்களுக்கான முதல் மேடை கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்களாம். அதேசமயம் எங்களை விழாவிற்கு கூட அழைக்காதது பிரச்னையில்லை, படம் நல்லப்படியாக திரைக்கு வந்தால் போதும் என்று பெருந்தன்மையுடன் கூறி வருகிறார்களாம் புதுமுக நடிகர்கள்.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஒருவர் தான், தயாரிப்பாளருடன் சேர்ந்து கொண்டு எல்லா பொறுப்பையும் தானே ஏற்று கொண்டு, புதுமுக நடிகர்களையும் படாதபாடு படுத்தியாகவும், அவருடைய அறிவுறுத்தலின்படி தான் ஆடியோ விழாவிற்கு கூட நடிகர்கள் யாரையுமே அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.