இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தற்போது சினிமா தியேட்டர்களில் தினமும் மதியம், மாலை, இரவு காட்சிகள் ஒளிபரப்பாகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை காட்சியும் இருக்கும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் 5 காட்சிகள் நடத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கும்.
இந்த நிலையில், இனி சினிமா தியேட்டர்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் எத்தனை காட்சிகள் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தில் மத்திய தொழிலாளர்கள் அமைச்சகம் கொண்டு வந்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் தியேட்டர்களில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்பது மட்டும் நிபந்தனை.
தியேட்டர்கள் போலவே வணிக வளாங்களும் 24 மணி நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை மாநில அரசுகள் அப்படியே ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாநிலங்கள் தனியாக சட்டத்தை உருவாக்கி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.