தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'பொல்லாதவன், ஆடுகளம்', ஆகிய படங்களுக்குப் பிறகு வெற்றிமாறன் - தனுஷ் மீண்டும் இணைந்துள்ள 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் ஆரம்பமானது. இப்படத்தின் நாயகியாக சமந்தா நடிப்பார் என எப்போதோ தனுஷ் அறிவித்திருந்தார். ஆனால், சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போனது. இதனிடையே, சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. தெலுங்குத் திரையுலகிலும், இங்கும் அவர்களது காதல் பற்றி நிறையவே செய்திகள் வெளியாகி வருகின்றன.
சமந்தா தற்போது புதிதாக எந்தப் படத்திலும் நடிக்க சம்மதிக்காமலே இருக்கிறார். அவர் தற்போது தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக 'ஜன்தா காரேஜ்' என்ற ஒரே படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை நாகசைதன்யா குடும்பத்தினர் விரும்பவில்லை என்று தெரிகிறது. நாகசைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா, அமலாவைத் திருமணம் செய்து கொண்ட பின் அமலாவும் நடிப்பதை விட்டுவிட்டார்.
நாகசைதன்யாவின் வேண்டுகோளுக்கிணங்க சமந்தாவும் நடிப்பதை விட முடிவு செய்துள்ளார் என டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக அவர் 'வட சென்னை' படத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. 'வட சென்னை' படத்தை 3 பாகங்களாக உருவாக்க வெற்றி மாறனும், தனுஷும் முடிவு செய்துள்ளார்கள். முதல் பாகத்தில் மட்டும் நடித்துவிட்டு சமந்தா விலகினால் நன்றாக இருக்காது. அதனால், இப்போதே அவர் விலகல் முடிவை தனுஷிடம் தெரிவித்துவிட்டதாகவும், அதற்கு தனுஷும் சம்மதம் சொல்லிவிட்டார் என்றும் தெரிகிறது.
அதனால்தான், தனுஷ் சில நாட்களுக்கு முன்பு 'வட சென்னை' நடிகர்கள் பற்றி விரைவில் அறிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார் என்கிறார்கள்.