வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சுசீந்திரன் இயக்குனராகவும், விஷ்ணு ஹீரோவாகவும், சூரி காமெடியனாகவும் அறிமுகமான படம் 'வெண்ணிலா கபடி குழு'. இந்த மூவரும் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஹீரோயினாக நடித்த சரண்யா மோகன் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது 7 வருடத்திற்கு பிறகு வெண்ணிலா கபடி குழுவின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள்.
இதில் பாரதிராஜாவின் 'அன்னக்கொடி' படத்தில் நடித்த லக்ஷ்மண், விஷ்னு நடித்த கேரக்டரில் நடிக்கிறார். சூரி அதே புரோட்டா கேரக்டரில் நடிக்கிறார், இவர்கள் தவிர அப்புக்குட்டி, ரவிமரியா நடிக்கிறார்கள். படத்தின் கதையை சுசீந்திரன் எழுதிக் கொடுத்திருக்கிறார். அவரது உதவியாளர் செல்வசேகரன் இயக்குகிறார். சாய் அற்புதம் சினிமாஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் பூங்காவனம், ஆனந்த் தயாரிக்கிறார்கள். ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.