ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வெளிவர உள்ள 'ரெமோ' படத்தின் முதல் பார்வையும், தீம் மியூசிக்கும் நேற்று நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரையை பின்னால் கொண்ட மேடையில் ஆடல், பாடலுடன் 'ரெமோ' படத்தின் முதல் பார்வையை பிரம்மாண்ட படங்களுக்குச் சொந்தக்காரரான ஷங்கர் வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயனை வைத்து அடுத்து படங்களை இயக்க உள்ள இயக்குனர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். சிவகார்த்திகேயன் இந்த நிலைமைக்கு வரக் காரணமாக இருந்த முந்தைய இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் தப்பித் தவறிக் கூட அழைக்கவில்லை. சிவகார்த்திகேயனை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்க உள்ள மோகன்ராஜா, பொன்ராம், ரவிகுமார் ஆகியோர் மேடையேறி சிவகார்த்திகேயனைப் பற்றியும் தங்களது தயாரிப்பு நிறுவனத்தைப் பற்றியும், தயாரிப்பாளர்களைப் பற்றியும் வழக்கம் போல புகழ்ந்து தள்ளினார்கள்.
மேலும் ஒரு படம் நடித்து முடிப்பதற்குள் அடுத்தடுத்து மேலும் 3 படங்களில் தனது நண்பர் ராஜாவின் தயாரிப்பில் மட்டுமே நடக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 'ரெமோ' படம் வெளிவருவதற்கு முன்பாகவே சிவகார்த்திகேயனை இயக்க 3 இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள் என்பதும் இயக்குனர் வட்டாரங்களில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.