ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் சில படங்களை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தப் படத்தின் சில விஷயங்களுக்காக ஞாபகம் வைத்திருப்போம். ஆனால், படத்தை இயக்கிய மணிரத்னம், படத்தில் அதிக எதிர்பார்ப்புடன் நடித்த விக்ரம் வரை மறக்க நினைக்கும் ஒரு படமாக இருப்பது 'ராவணன்'. இதே நாளில் ஆறு வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இயக்க, விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருத்விராஜ், கார்த்திக், பிரபு, பிரியாமணி மற்றும் பலர் நடிக்க வெளிவந்த படம்தான் 'ராவணன்.
மணிரத்னம் படம் என்றாலே எப்படியும் ஓடி விடும், விமர்சகர்களின் பெரும் ஆதரவைப் பெற்று விடும் என்ற ஒரு எதிர்பார்ப்பு அப்போது இருந்தது. அதையும் மீறி 'ராவணன்' படம் தோல்வியடைந்தது மணிரத்னம் உட்பட திரையுலகினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் உருவான இந்தப் படம் 'ராமாயணம்' கதையை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு மொழிகளிலும் வியாபார ரீதியாக மிகப் பெரும் தோல்வியைத் தழுவியது. மணிரத்னம் படத்தில் நடித்து விட்டால், அப்படியே ஹிந்திக்கும் போய்விடலாம் என்று மிகப் பெரும் ஆசை வைத்திருந்த விக்ரமுக்கும் இந்தப் படத்தின் தோல்வி பேரிடியைத் தந்தது. இருந்தாலும் ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேர்ந்ததை மட்டும் விக்ரம் பெருமையாக நினைத்துக் கொள்ளலாம்.
கார்த்திக், பிரபு என மணிரத்னத்தின் முந்தைய ஹீரோக்கள், தங்கை கதாபாத்திரங்களில் சில காட்சிகள் மட்டுமே வந்த பிரியாமணி என பலருக்கும் இந்தப் படம் மறக்க வேண்டிய படமாகத்தான் அமைந்தது.
'ராவணன்' தோல்விக்குப் பிறகு மூன்று வருடங்கள் எந்தப் படத்தையும் இயக்காமலே இருந்தார் மணிரத்னம். இப்படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமையை ராஜ் டிவி சுமார் 3 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது மட்டுமே, இப்படத்தின் மிகப் பெரிய வருமானம் என்று சொல்லலாம்.
சினிமா யாரை எப்போது சறுக்க வைக்கும், ஏற்ற வைக்கும் என்பதற்கு 'ராவணன்' படமும் மிகச் சிறந்த உதாரணம்தான்.