ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் பைட்டராக பல படங்களில் நடித்தவர் நான் கடவுள் ராஜேந்திரன். பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் கொடூரமான வில்லனாக நடித்த அவரது மார்க்கெட் அதையடுத்து சூடு பிடித்தது. அதனால் தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த அவர் பின்னர் காமெடியனாக உருவெடுத்தார். அந்த வகையில், சந்தானம் ஹீரோவாக பிறகு ராஜேந்திரனை மையமாக வைத்து சில படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்றது. அதோடு வடிவேலு காமெடியனாக நடிக்க வேண்டிய சில படங்களிலும் தான் நடித்து ஸ்கோர் பண்ணிய நான் கடவுள் ராஜேந்திரன் இப்போதும் பிசியாக நடித்து வருகிறார்.
அதேசமயம், சினிமாவில் தான் முன்னணி நடிகராகி விட்டபோதும், பழைய பழக்கவழக்கங்களை மறக்காமல் இருக்கிறார் ராஜேந்திரன். அதாவது, நான் பெரிய காமெடியன் எனக்கு கேரவன் உள்ளிட்ட சில வசதிகள் செய்து தர வேண்டும் என்று அவர் தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்வதில்லை. மரத்தடியில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்து கொள்கிறார். அதோடு, வசதி வாய்ப்பு வந்து விட்டது என்பதற்காக அவர் பீடிக்கு பதிலாக சிகரெட்கூட பிடிப்பதில்லை. நான் ஆரம்பத்தில் இருந்தே பீடிதான் குடிக்கிறேன். அதுதான் எனக்கு பிடிக்கும். ஆனால் இன்றைக்கு காசு பணம் வந்து விட்டது என்பதற்காக அதை ஓரங்கட்டி விட்டு என்னால் சிக ரெட்டுக்கு மாற முடியாது. இது நிரந்தரமாக கிடைத்தாலே போதும் என்று நினைக்கிறேன் சொல்லி யூனிட் நபர்களை ஆச்சர்யப்படுத்துகிறாராம்.