தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'இறைவி' படம் வெளிவந்து ஒரு வாரம் ஆகியுள்ள சூழ்நிலையில் அந்தப் படம் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் இன்னும் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன. 'இறைவி' படம் பெண்களைப் பெருமைப்படுத்தும் படம் என படம் வெளிவருவதற்கு முன்பு படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியிருந்தார். ஆனால், பெண்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அந்தப் படம் இருந்ததா, அவர்களின் போராட்டக் குணங்களை வெளிப்படுத்தும் படமாக இருந்ததா என்பது கேள்வியாகிப் போனது. ஆண்களுக்குச் சமமாக பெண்களும் நடந்து கொள்ளலாம் என நமது கலாச்சாரத்தையும் சற்றே கேலி செய்யும் படமாகவும் அமைந்தது. பெண் இயக்குனர்களுக்கும், பெண் விமர்சகர்களுக்கும் அந்தப் படம் நிறைவைத் தரவில்லை என்பது கடந்த ஒரு வார காலமாக உணர்த்தி வருகிறது.
இதனிடையே, நாளை வெளிவர இருக்கும் 'ஒரு நாள் கூத்து' படத்தை தங்களது படைப்பின் மீதுள்ள நம்பிக்கையால் நேற்றே பத்திரிகையாளர்களுக்குக் காட்டினார்கள். படத்தைப் பார்த்த பலரும் 'இறைவி' என்ற தலைப்பு 'ஒரு நாள் கூத்து' படத்திற்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று அபிப்பிராயப்பட்டார்கள்.
'ஒரு நாள் கூத்து' படம் மூன்று பெண்களின் வாழ்க்கையில் திருமணம் எப்படி அமைகிறது என்பது பற்றிய படமாகத்தான் இருக்கிறது. 'இறைவி' படத்தில் இல்லாத விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கிறது. ஐ.டியில் வேலை பார்க்கும் ஒரு பெண், ரேடியோ ஆர்.ஜே.வாக இருக்கும் ஒரு பெண், ஆசிரியை படிப்பை முடித்து விட்டு திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஒரு பெண் என இந்த மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றும் படம்தான் 'ஒரு நாள் கூத்து'.
இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாதது 'ஒரு நாள் கூத்து' படத்திற்கு சாகதமான விஷயம்தான். இப்படத்தை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்.