ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விமல் நடித்த களவாணி, வாகை சூடவா, மஞ்சப்பை என கிராமத்து கதைகளே அவருக்கு ஹிட் படங்களாக அமைந்தன. அதன்காரணமாக கிராமத்து கதைகளுக்கே அவரை இயக்குனர்கள் புக் பண்ணி வந்தனர். இதனால் கிராமத்து நடிகர் என்கிற முத்திரை விமல் மீது விழுந்திருக்கிறது. ஆனால் அந்த மாதிரி கதைகளில் எந்த படத்தில் நடித்தாலும் அவரது நடிப்பு ஒரேமாதிரியாக இருப்பதாகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதனால் தற்போது தனது கிராமத்து இமேஜை மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் விமல்.
குறிப்பாக, வித்தியாசமான நகரத்து வேடங்களை தேடும் அவர், அறிந்தும் அறியாமலும் நவ்தீப் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கிறார். அதுவும் அதிரடியான வில்லனாம். இந்த படத்தில் விமல் அஞ்சான் படத்தில் சூர்யா நடித்தது போன்று ஹேர்ஸ்டைல் மற்றும் காதில் கடுக்கம் அணிந்து நடிக்கிறாராம். இதையடுத்து சில சிட்டி சப்ஜெக்ட்டுகளில் மாறுபட்ட நாயகனாக நடிக்கவும் சீரியசாக கதை கேட்டு வருகிறார் விமல்.