டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'இறைவி' படம் வெளிவரும் வரை அந்தப் படத்தில் எந்த மாதிரியான கதையை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வைத்திருக்கிறார் என்பது தெரியாமலே இருந்தது. படம் வெளிவருவதற்கு முன்பும் இந்தப் படத்தின் கதையை விமர்சனம் எழுதும் போதும் யாரும் எழுதிவிட வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்தார். அதற்கு என்ன காரணம் என்பது இப்போதுதான் புரிகிறது.
சுஜாதா எழுதிய 'ஜன்னல் மலர்' நாவலின் 'பார்ட்லி இன்ஸ்பிரேஷன்' தான் 'இறைவி' படம் என்பதை படம் முடிந்து 'ரன்னிங் டைட்டில்'-ல் வேகமாக ஓட்டியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அதை எதற்கு இத்தனை நாட்களாக மறைத்து, மூடி வைத்திருக்க வேண்டும்.
சுஜாதாவின் 'ஜன்னல் மலர்' நாவல் சிறையிலிருந்து திரும்பி தன்னுடைய மனைவி, குழந்தைகளைத் தேடும் ஒருவரின் கதையாகத்தான் எழுதப்பட்டிருந்தது. அந்த கதையின் நாயகன் தான் 'இறைவி' படத்தில் வரும் விஜய் சேதுபதி கதாபாத்திரம். ஆனால், படம் பார்க்கும் போது அனைவருக்குமே எஸ்.ஜே.சூர்யா தான் நாயகனாகத் தெரிவார். பாபி சிம்ஹா வில்லனாகத் தெரிவார். விஜய் சேதுபதி ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளவராகத் தெரிவார்.