இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஒரே படத்தில் பாடலுக்கு ஒரு இசையமைப்பாளர், பின்னணி இசைக்கு இன்னொரு இசையமைப் பாளர் என இரண்டு பேர் இடம்பெறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, சங்கர்- கணேஷ் என இரண்டு இசையமைப்பாளர்கள் இணைந்து நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்து வந்த வரலாறும் தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்கிறது. இந்த நிலையில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா-தமன்னா இணைந்து நடித்துள்ள படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்கிறார்களாம்.
இதுபற்றி ஏ.எல்.விஜய் கூறுகையில், பிரபுதேவாவை வைத்து நான் இயக்கி வரும் அபினேட்ரி படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. அந்தவகையில், மூன்று மொழிக்கும் சேர்த்து ஒரே இசையமைப்பாளர் இசையமைப்பதைவிட அந்தந்த மொழிகளில் பிரபலமாக இருக்கும் இசையமைப்பாளர்கள் இசையமைத்தால், படத்திற்கு ஒரு பலமாக இருக்குமே என்று நினைத்தோம். அதன்காரணமாக, தமிழ் பதிப்புக்கு ஜி.வி.பிரகாஷ், தெலுங்கிற்கு தமன், இந்திக்கு சஜித்வஜித் ஆகிய பிரபல இசையமைப்பாளர்களை இசையமைக்க வைத்திருக்கிறோம். இதுகூட இந்த படத்தில் ஒரு புதுமையான விசயம்தான் என்கிறார் அவர்.