பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்து முதல் படமான பென்சில் 2 வருடங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் வெளியானது. இதில் ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக நடித்திருந்தார். இதனை கல்சன் மூவீஸ் சார்பில் எஸ்.வி.ராகவேஷ் தயாரித்திருந்தார். மணி நாகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் ஒரு கொரியன் படத்தின் அப்பட்டமான காப்பி என்று ஒரு புறம் பரபரத்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இதனால் தயாரிப்பாளர்களுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த ஜி.பி.பிரகாஷ்குமார் அங்கு புகார் மனு அளித்தார். “எங்கள் தயாரிப்பான பென்சில் படம் கடந்த 13ந் தேதி வெளிவந்தது. ஆனால் 14ந் தேதியே அதன் திருட்டு விசிடி விற்பனைக்கு வந்துவிட்டது. இணைய தளங்களிலும் வெளியாகி உள்ளது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தயவு செய்து இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டதோடு படம் வெளியான இணைய தள முகவரியையும் கொடுத்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த ஜி.வி.பிரகாஷ்குமார் இதே புகாரை விளக்கி கூறினார்.