புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வரும் 20ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்ட 'இது நம்ம ஆளு' திரைப்படம் மேலும் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த விதத்தில் பாண்டிராஜுக்கே நான்கைந்து கோடிகள் தர வேண்டியுள்ளதாம் படத்தின் தயாரிப்பாளரான டி.ராஜேந்தர். இதற்கான பஞ்சாயத்து நீண்ட நாட்களாகவே தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்து வருகிறது. ஆனாலும் இறுதி முடிவு எட்டப்படாமலே உள்ளதாம்.
இதனிடையே 'வாலு' படத்தை வெளியிட்ட விதத்தில் டி.ராஜேந்தருக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக கடனாளி ஆகியுள்ளாராம். அது மட்டுமல்ல அந்தப் படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்களும் அடுத்த சிம்பு படம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று அப்போதைக்கு அமைதியாக இருந்தார்கள். அவர்களும் இப்போது பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளார்களாம். ஏற்கெனவே, பல கோடிகள் நஷ்டப்பட்டிருக்கும் நிலையில் அந்த நஷ்டத் தொகையையும் கொடுத்தால் டி.ஆரால் தாங்கவே முடியாதாம்.
மேலும் இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையில் இந்தப் படத்தை வெளியிடுவதா என ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் யோசித்து வருகிறதாம். இப்படி பல காரணங்களால் படம் மேலும் ஒரு வாரம் தள்ளிப் போகும் என்கிறார்கள். அன்றாவது படம் வருமா அல்லது மேலும் தள்ளிப் போகுமா என்பது சிம்புவுக்கே கூடத் தெரியாது.