டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னிந்தியாவின் முதல் சோம்பி வகை திரைப்படம் மிருதன். ஜெயம் ரவி, லட்சுமிமேனன் நடித்திருந்த இந்தப் படத்தை நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். இமான் இசை அமைத்திருந்தார், எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். குளோபல் இன்போடையின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். கடந்த பிப்ரவரி 19ந் தேதி வெளியான இந்தப் படம் பரவலான பாராட்டுகளை பெற்றது. தற்போது இந்தப் படம் கனடாவில் நடபெற இருக்கும் பெஃண்டாசியா திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருக்கிறது. எந்திரன் படத்திற்கு பிறகு தேர்வாகி இருக்கும் தமிழ் படம் மிருதன்.
இதுகுறித்து ஜெயம் ரவி கூறியதாவது: அன்னையர் தினத்தன்று கனடா திரைப்பட விழாவுக்கு மிருதன் தேர்வான செய்தி கிடைத்தது. அம்மாவிடம் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் என் முதல் படம் இது. கலைக்கு எல்லை இல்லை. நல்ல கலை எங்கும் ரசிக்கப்படும், கொண்டாடப்படும் என்பார்கள். அதை இப்போது உணர்கிறேன். மிருதன் ஹாலிவுட் தரத்திலான படம் என்று மீடியாக்கள் பாராட்டின. அது இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.