விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
கடந்த சில வருடங்களாக, சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ்ப்படங்கள் கலந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. அவற்றில் பல திரைப்பட விழாக்கள், அங்கீகரிக்கப்பட்ட விருது விழா என் சொல்லமுடியாது. என்றாலும் அந்த திரைப்பட விழாக்கள் வெளிநாட்டில் நடைபெறுவதினாலேயே அதை பெருமைக்குரியதாக எண்ணுகின்றனர் நம்ம ஊர்கலைஞர்கள்.
'தென்னிந்தியாவின் முதல் ஸோம்பி படம்' என்ற பெருமையோடு சமீபத்தில் வெளிவந்த படம் 'மிருதன்'. ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த இப்படத்தை இயக்கியவர் 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன். இப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் ஸோம்பி கதைகள் பிரபலமானவை. அது மட்டுமல்ல அங்கே அவை அவுட்டேட்டட் ஆகியும் விட்டன.
இந்நிலையில், தமிழில் வெளிவந்த முதல் ஹாரர் படம் என்ற பெருமையோடு 'மிருதன்' படம் வெளியானது. அதனாலேயே அப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இப்படம் கனடாவில் நடைபெறவிருக்கும் 'ஃபேன்டஸியா இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலி'ல் திரையிடப்படுவதற்குத் தேர்வாகியிருக்கிறது. இந்தத் தகவலை ஜெயரம் ரவியே தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.