'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனுஷ் அடுத்து நடிக்கவிருக்கும் படம் என்ன என்று போட்டி வைத்து சரியான பதில் சொல்கிறவர்களுக்கு ஒரு கோடி பரிசு அறிவிக்கலாம் போலிருக்கிறது. யாருமே சரியான விடையை சொல்ல முடியாமல் திணறும் அளவுக்கு தன்னுடைய புதிய பட ஒப்பந்தங்களை மாற்றிக் கொண்டே வருகிறார் தனுஷ். பிரபுசாலமன் இயக்கத்தில் 'தொடரி' படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ்.
விரைவில் ரிலீஸாகவிருக்கும் இந்தப் படத்திற்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' என்ற படத்திலும், ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார் இயக்கத்தில் 'கொடி' படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இவைதவிர, 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபக்கிர்' என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்தப் படங்களைத் தவிர்த்து ஏற்கெனவே அவருடைய பட்டியலில் வெற்றிமாறன் இயக்கும் 'வடசென்னை' படமும் இருக்கிறது. இது இரண்டு பாகங்களாக தயாராக உள்ளதாகவும், அதற்காக சுமார் ஒரு வருடம் கால்ஷீட் கொடுக்க இருப்பதாகவும் ஏற்கனவே சொல்லி இருந்தார். தவிர செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லி வருகிறார். இப்போது லேட்டஸ்ட்டாக அதில் 'மாரி 2' வும் இணைந்துள்ளது.
கொடி, என்னை நோக்கிப் பாயும் தோட்டா படங்களின் படவேலைகளை நவம்பருக்குள் முடித்துவிட்டு வெற்றிமாறனின் வடசென்னையிலும், பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி' 2ஆம் பாகத்திலும் டிசம்பர் முதல் நடிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் தனுஷ்.