ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவர் தியாகராஜன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் தன் நடிப்பால் மிரட்டிய இந்த மம்பட்டியான், 1980களில் முன்னணி நடிகராக வலம் வந்தார். இடையில் சிலகாலம் நடிப்பை விட்டு ஒதுங்கியிருந்தவர் 'துரோகி' படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். தற்போது மீண்டும் சினிமாவில் மிரட்ட வருகிறார். அதுவும் கைநிறைய படங்களுடன் இந்தாண்டு முழுக்க பிஸியாக வலம் வர இருக்கிறார்.
தற்போது செந்தில் குமார் இயக்கத்தில் 'வாய்மை' படத்தில் கவுண்டமணியுடன் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார் தியாகராஜன். இதுகுறித்து இயக்குநர் செந்தில்குமார் பேசும்போது, 'வாய்மை' படத்தில் மிரட்டலாக நடித்திருக்கிறார் தியாகராஜன். அவரை தவிர அந்த ரோலில் வேறு யாரும் நடிக்க முடியாது, அந்தளவுக்கு மிரட்டியிருக்கிறார் தியாகராஜன் என்கிறார்.
'வாய்மை' மட்டுமல்லாது ஜீவா சங்கர் இயக்கத்தில், 'யமன்' படத்தில் விஜய் ஆண்டனியுடன் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். இதுதவிர 'அம்முவாகிய நான்' இயக்குநர் பத்மாமகன் இயக்கத்தில் 'பூமி' என்ற படத்தில் ஒரு ஸ்பெஷல் ரோலில் நடிக்கிறார். பூமி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மலேஷியாவில் முடிந்துள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.
இந்த படங்கள் தவிர இன்னும் பெயரிடப்படாத இரண்டு புதிய படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் தியாகராஜன். படங்களில் நடிப்பது மட்டுமின்றி தான் தயாரிக்கவுள்ள 'ஸ்பெஷல்-26' மற்றும் 'குயின்' படங்களின் ரீ-மேக் வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார் தியாகராஜன்.
ஆக நடிப்பு, தயாரிப்பு என்று மீண்டும் பரபரப்பாக சுழல ஆரம்பித்திருக்கிறார் தியாகராஜன்.