'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சில தினங்களுக்கு முன் ஏதோவொரு வேலையாக பிரசாத் லேப் வளாகத்துக்கு வந்திருந்தார் கபாலி பட இயக்குநரான பா.ரஞ்சித். அதே நேரம் அங்குள்ள தியேட்டரில் பத்திரிகையாளர்களுக்கான காட்சி நடைபெற்று கொண்டிருந்தது. படம் முடிந்து பத்திரிகையாளர்கள் வெளியே வர, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பி.ஆர்.ஓ. ஓடிப்போய் பா.ரஞ்சித்தின் காதில் என்னவோ சொன்னார்.
அவ்வளவுதான்... ஒரே ஓட்டமாக ஓடிய பா.ரஞ்சித், பத்திரிகையாளர்களின் பார்வையில் படாதவாறு ஒளிந்து கொண்டார். அவரிடம் அந்த பி.ஆர்.ஓ. என்ன சொல்லி இருப்பார்? பத்திரிகையாளர்கள் வருகிறார்கள். கபாலி பற்றி ஏதாவது வாயைக்கிளறுவார்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். எதற்கு வம்பு என்று நினைத்தாரோ என்னவோ ஒரே ஓட்டமாக ஓடி ஒளிந்து கொண்டார் பா.ரஞ்சித்.
அட்டகத்தி, மெட்ராஸ் என பா.ரஞ்சித் இயக்கியது இரண்டே படங்கள்தான். அதற்குள் அவருக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு அவரது திறமையைவிட மீடியாக்கள் அவருக்கு தந்த ஆதரவும் பாராட்டுக்களும்தான் முக்கிய காரணம். ரஜினி படம் கிடைத்ததும் பழசை மறந்துவிட்டார் பா.ரஞ்சித்.