தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் கமல்ஹாசன் ஒரேநாளில் மூன்று படங்களை துவக்குகிறார், இதற்காக நடிகர் சங்க வளாகம் தயாராகியுள்ளது. தூங்காவனம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன், ராஜீவ் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதோடு மேலும் இரண்டு படங்களையும் ஆக மொத்தம் மூன்று படங்களை ஒரேநாளில் ஆரம்பிக்கிறார் கமல். இதுகுறித்த விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில் மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா.? என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு புரெடாக்ஷன் நம்பர் 41, 42, 43 என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன். இப்படங்களின் பூஜை நடிகர் சங்க வளாகத்தில் ஏப்.,29ம் தேதி(நாளை) நடக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் கமல் ஏற்கனவே தன் படத்தை நடிகர் சங்க வளாகத்தில் துவக்க இருப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி நடிகர் சங்க வளாகம் பிரத்யேகமாக தயாராகியுள்ளது. சங்க வளாகத்தில் சாமியானா பந்தல் எல்லாம் போடப்பட்டு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயாராகியுள்ளது.
பாபநாசம் படத்திற்கு பிறகு கமலின் வேகம் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறுகியகாலத்தில் படங்களை தயாரித்து வெளியிட உள்ளார். அதன்படி தற்போது மூன்று படங்களுக்கான பூஜையை நாளை போட இருக்கிறார்.